திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 812 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 61 | நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே | பதவுரை Show / Hideவிலங்கு, Vilangu - நீர் பெருகவொண்ணாதபடி தடையாயிருக்கிற மால் வரை, Maal Varai - பெருப்பெருத்த மலைகளையும் கரம், Karam - பாலைநிலம் முதலிய அருவழிகளையும் கடந்த, Kadandha - (வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற கால் பரந்த, Kaal Parandha - விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய காவிரி, Kaaviri - திருக்காவேரி நதியினுடைய கூரை, Kooraik - கூரைமீது குடந்தையும், Kudandhaiyum - திருக்குடந்தையிலே கிடந்த ஆறு, Kidandha Aaru - திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது நடந்த கால்கள் நொந்தவோ, Nadandha Kaalgal Nondhavo - உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?) ஞாலம், Njaalam - பூமிப்பிராட்டியானவள் நடுங்க, Nadunga - (பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து) ஏனம் ஆய், Enam Aay - மஹாவராஹமூர்த்தியாகி இடந்த, Idandha - அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த மெய், Mei - திருமேனி குலுங்கவோ?, Kulungavo - ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?) கோனே, Kone - கோவனே! எழுந்திருந்து போ, Ezhunthirundhu Po - (எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க; வாழி, Vaazhi - இக்கிடையழகு என்றும் வாழ்க. |