திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 813 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 62 | கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே | பதவுரை Show / Hideகரண்டம் ஆடு பொய்கையுள், Karandam Aadu Poigaiyul - நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே கரு பனை பெரு பழம், Karup Panai Peru Pazham - கரிய பெரிய பனம்பழங்களானவை புரண்டு வீழ, Purandu Veezh - விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின) வாளை, Vaalai - மீன்கள் பாய், Paai - துள்ளியோடி யொனிக்கின்ற குறுங்குடி, Kurungkudi - திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற நெடுந்தகாய், Nedunthakai - மஹாதுபாவனே! திரண்ட தோள், Thiranda Thol - திரண்டதோள்களையுடையவனான இரணியன், Iraniyan - ஹிரண்யனுடைய சினம்கொள் ஆகம் ஒன்றை, Sinamkol Aagam Ondrai - மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை இரண்டு கூறு செய்து, Irandu Koordu Seidhu - இருபிளவாகப் பிளந்து உகந்த, Ugantha - மகிழ்ந்த சிங்கம் என்பது, Singam Enbathu - நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது உன்னையே, Unnaiye - உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.) |