திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 817 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
817ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 66
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே
பதவுரை Show / Hide
நின்று சாதல், Ninru Saadal - சிலகாலமிருந்து செத்துப் போவதோ
அன்றி, Andri - இவ்விரண்டத்தொன்று தவிர
யாரும், Yaarum - மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும்
வையகத்து, Vaiyagaththu - இந்நிலத்திலே
ஒன்றி நின்று, Onri Ninru - சிரஞ்சீவியாயிருந்து
வாழ்தல் இன்மை கண்டும், Vaazhdhal Inmai Kandum - வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும்
நீசர், Neesar - அறிவில்லாதவர்கள்
அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று, Andru Paar Alandhapathapothai Unnisendru - முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து
சென்று, Sendru - அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று
வானின்மேல் சென்று, Vaaninmel Sendru - பரமபதத்தேறப் புகுந்து
தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல், Thevar Aay Irukkilaadha Vannam En Kol - நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ?