திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 818 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
818ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 67
சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ
பதவுரை Show / Hide
சண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று, Sandan Mandalaththinoodu Sendru Veedu Pettru - ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய்
வீடு பெற்று, Veedu Pettru - பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்)
மேல்வீடு இலாத, Melveedu Ilaadha - பக்தியின் பயனான கைங்கர்ய
காதல் இன்பம், Kaadhal Inbam - ஸுகத்தை நித்தியமாகப் பெற
நாளும் கண்டு, Naalum Kandu - விருப்பமுடையவர்களே!
எய்துவீர், Eyduveer - (முமுக்ஷுக்களே)
புண்டரீக  பாதன், Pundareeka Paadhan - தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய
புண்ய கீர்த்தி, Punya Keerthi - பரிசுத்தமான திருப்புகழ்களை
நும் செவி, Num Sevi - உங்களுடைய காதுகளிலே
மடுத்து, Madhuthu - தேக்கி
உண்டு, Undu - அநுபவித்து.
நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின், Num Uru Vinai Thuyarum Neengi Uymmin - உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள்.