திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 820 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 69 | காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே | பதவுரை Show / Hideகாணிலும், Kaanilum - கண்டாலும் உரு போலார், Uru Polaar - விகாரமான உருவத்தையுடையராயும் செவிக்கு இனாத கீர்த்தியார், Sevikku Inadha Keerthiyar - காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும் பேணிலும், Penilum - (இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும் வரம் தர, Varam Thara - (ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க மிடுக்கு இலாத, Midukku Iladha - சக்தியற்றவர்களாயுமுள்ள தேவரை, Devarai - தேவதைகளை ஆணம் என்று, Aanam Endru - சரணமென்றுகொண்டு அடைந்து வாழும், Adaindhu Vazhume - அவற்றையடைந்து கெட்டுப்போகிற ஆதர்கள், Aadhargal - குருடர்களே! என் ஆதிபால், En Aathipaal - ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து பேணி, Peni - வழிபாடுகளைச் செய்து நும், Num - உங்களுடைய பிறப்பு எனும், Pirappu Ennum - ஸம்ஸாரமாகிற பிணக்கு, Pinakku - பெரும்புதரை அறுக்க கிற்றிரே, Arukka Kitrire - அறுத்தொழிக்க வல்லீர்களே? |