திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 821 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 70 | குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே | பதவுரை Show / Hideகுந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள், Kundhamodu Kulam Velkgal Thomarangal Thandu Vaal - ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட) பந்தம் ஆன தேவர்கள், Pandham Aana Devargal - கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள் பரந்து, Parandhu - (பல திக்குகளிலும்) சிதறிப் போய் வானகம் உற, Vaanagam Ura - தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர வந்த வாணன், Vandha Vaanan - (பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய ஈர் ஐநூறு தோள்களை, Eer Ainooru Tholgalai - ஆயிரந்தோள்களை துணிந்த நாள், Thunindha Naal - அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்) அந்த அந்த அகுலம், Andha Andha Akulam - வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை அமரரே அறிவர், Amararai Arivar - (நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.) |