திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 822 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
822ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 71
வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள் முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே
பதவுரை Show / Hide
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால், Vandu Ulaavu Kothai Maathar Kaaranathinaal - (மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக
வெகுண்டு, Vegundu - கோபங்கொண்டு
இண்ட, Inda - செறித்துவந்த
வாணன், Vaanan - பாணாகரனுடைய
ஈர் ஐ நூறு தோள்களை, Eer Ainooru Tholgalai - ஆயிரந்தோள்களை
துணித்தநாள், Thuniththa Naal - கழித்தபோது
முண்டன் நீறன், Mundhan Neeran - மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும்
மக்கள், Makkal - அவனுடைய குமாரர்களும்
வெப்பு, Veppu - ஜ்வரதேவதையும்
மோடி, Modi - பிடாரியும்
அங்கி, Angi - அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்)
ஓடிட, Oadida - (பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே
கண்டு, Kandu - பார்த்து
நாணி, Naani - (இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு
வாணனுக்கு, Vaananukku - பாணாகரன் விஷயத்தில்
இரங்கினான், Iranginaan - கிருபைபண்ணினவன்
எம்மாயனே, Emmaayaney - ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.)