திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 823 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
823ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 72
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும் போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில் மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே
பதவுரை Show / Hide
போதில் மங்கை, Pothil Mangai - பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி, Poothalam Kizhaththi - பூமிப்பிராட்டியும்
தேவி, Devi - தேவிமாராவர்;
அன்றியும், Anriyum - மேலும்
போது தங்குநான் முகன், Pothu Thangunaan Mughan - பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்
அவன் மகன், Avan Magan - பேரனாயிரா நின்றான்;
என்று, Endru - இவ்வண்ணமாக
வேதம்நூல், Vedhamnool - வேத சாஸ்த்ரம்
ஓதுகின்றது, Odhugindrathu - உரைப்பதானது
உண்மை, Unmai - ஸத்யம்
மகன், Magan - புத்திரனாயிரா நின்றான்;
சொலில், Soliil - மேலும் சொல்லப்புக்கால்
மாது தங்கு கூறன், Maathu Thangu Kooraan - ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய்
ஏறு அது ஊர்தி, Aeru Adhu Oorthi - எருதை வாஹனமாக வுடையனான சிவன்
மற்று, Mattru - இங்ஙனன்றிக்கே
அல்லது, Allathu - இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை)
உரைக்கில், Uraikkil - (சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில்
இல்லை, Illai - அது அஸத்யம்