திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 825 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 74 | அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே | பதவுரை Show / Hideமுதலாயிரம், Muthalayiram - திருச்சந்தவிருத்தம் வாமணன், Vaamanan - உலகளந்த பெருயாமனுடைய அடி இணை, Adi Inai - அடியிணைகளை அறிந்து அறிந்து, Arindhu Arindhu - உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு வணங்கினால், Vananginaal - நமஸ்கரித்தால் செறிந்து எழுந்த ஞானமொழி, Serindhu Ezhuntha Gnanamozhi - பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும் செல்வமும், Selvammum - பக்தியாகிற செல்வமும் செறித்திடும், Serithidum - பரிபூர்ணமாக விளையும் மறிந்து எழுந்த, Marindhu Ezhuntha - பரம்பிக்கிளர்ந்த; தென் திரையுள், Then Thiraiyul - தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே மன்னு, Mannu - நிதய்வாஸம் செய்தருள்கின்ற மாலை, Maalai - ஸர்வேச்வரனை வாழ்தினால், Vaazhdhinaal - ஸங்கீரத்தகம் பண்ணினால் எழுந்த தீவினைகள், Ezhuntha Theevinaigal - ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள் பற்று அறுதல், Patru Aruthal - வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல் பன்மையே, Panmaiye - இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.) |