திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 826 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 75 | ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே | பதவுரை Show / Hideஒன்றி நின்று, Onri Ninru - மனம் சலியாமல் நிலைத்து நின்ற நல் தவம், Nal Thavam - விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது கர்மயோகத்தை) ஊழி ஊழிதோறு எலாம் செய்து, Oozhi Oozhithoru Elam Seidhu - பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து அவன் குணங்கள், Avan Gunangal - அப்பெருமானுடைய திருக்குணங்களை நின்று நின்று உள்ளி, Ninru Ninru Ulli - ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து உள்ளம் தூயர் ஆய், Ullam Thuyar Aay - கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய் சென்று சென்று, Sendru Sendru - மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம் மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று) உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர், Umbar Umbar Umbar Aay Andri Deevadevar - பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது தேவதேவர், Deevadevar - (மற்றபடி) தேவதேவராயிருந்தாலும் எங்கள் செம் கண் மாலை, Engal Sem Kan Maalai - செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை யாவர் காணவல்லர், Yaavar Kaanavallar - யார் காணக்கூடியவர்கள். |