திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 827 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 76 | புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே | பதவுரை Show / Hideபுல், Pul - க்ஷுத்ரங்களான புலன் வழி, Pulan Vazhi - சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை அடைத்து, Adaiththu - அடைத்து அரக்கு இலச்சினை செய்து, Arakku Ilachchinai Seidhu - (விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு நன் புலன் வழி திறந்து, Nan Pulan Vazhi Thirandhu - ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு ஞானம், Gnanam - ஞானமாகிய நல்சுடர், Nalsudar - விலக்ஷமான ப்ரபையை கொளீ இ, Kolii I - கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து) என்பு இல், Enbu Il - எலும்பு வீடாகிய சரீரம் என்கி, Enki - சிதிலமாகி நெஞ்சு உருகி, Nenju Urugi - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்) உள் கனிந்து, Ul Kaninthu - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்) உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி, Un Kaninthu Ezhunthathu Oor Anbil Andri - பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது ஆழியானை, Aazhiyaanai - திருவாழியைக் கையிலேந்தின பெருமானை |