திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 827 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
827ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 76
புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே
பதவுரை Show / Hide
புல், Pul - க்ஷுத்ரங்களான
புலன் வழி, Pulan Vazhi - சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை
அடைத்து, Adaiththu - அடைத்து
அரக்கு இலச்சினை செய்து, Arakku Ilachchinai Seidhu - (விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு
நன் புலன் வழி திறந்து, Nan Pulan Vazhi Thirandhu - ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு
ஞானம், Gnanam - ஞானமாகிய
நல்சுடர், Nalsudar - விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ, Kolii I - கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல், Enbu Il - எலும்பு வீடாகிய சரீரம்
என்கி, Enki - சிதிலமாகி
நெஞ்சு உருகி, Nenju Urugi - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உள் கனிந்து, Ul Kaninthu - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி, Un Kaninthu Ezhunthathu Oor Anbil Andri - பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது
ஆழியானை, Aazhiyaanai - திருவாழியைக் கையிலேந்தின பெருமானை