திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 828 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 77 | எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே | பதவுரை Show / Hideஎட்டும் எட்டும் எட்டும் ஆய், Ettum Ettum Ettum Aayi - இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும் ஓர் ஏழும் ஏழும் ஆய், Oor Eezhum Eezhum Aayi - ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும் எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற, Ettum Moondrum Ondrum Aagi Nindra - த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற ஆதி தேவனை, Aadhi Devanai - பரமபுருஷனை எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று, Ettiyapp Podhamodu Iranchi Nindru - ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி அவள் பெயர் எட்டு எழுத்தும், Aval Peyar Ettu Ezhuthum - அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஓதுவார்கள், Othuvargal - அநுஸந்திக்குமவர்கள் வானம் ஆன வல்லர், Vaanam Aana Vallar - பரமபதத்தை ஆளவல்லவர்களாவர் |