திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 831 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 80 | வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே | பதவுரை Show / Hideவாசி ஆகி, Vaasi Aagi - (கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு நேசம் இன்றி வந்து, Nesam Inri Vandu - பக்தியற்றவனாய் வந்து எதிந்த, Edhintha - எதிரிட்ட தேனுகன், Thenughan - தேநுகாஸுரனை நாசம் ஆகி நான் உலப்ப, Nasam Aagi Naan Ulappa - ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக மேல் நிமிர்ந்த தோளின், Mel Nimirtha Tholin - உயர்த்தூக்கப்பட்ட தோளாலே நன்மை சேர் பணங்கனிக்கு வீசி, Nanmai Ser Pananganikku Veeci - அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து இல்லை ஆக்கினாய் கழற்கு, Illai Aakkinai Kazharku - (அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு ஆசை ஆமவர்க்கு அலால், Aasai Aamavarkku Alal - நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு அமரர் ஆகல், Amarar Aagal - நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல் ஆகுமே, Agume - கூடுமோ? |