திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 832 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
832ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 81
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய் மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ
பதவுரை Show / Hide
கடைந்த, Kadaindha - (கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட
பால் கடல், Paal Kadal - திருப்பாற்கடலிலே
கிடந்து, Kidandhu - கண்வளர்ந்தருளியும்
காலநேமியை, Kaalanemiyai - காலநேமியென்னுமசுரனை
கடிந்து, Kadinthu - ஒழித்தருளியும்
உடைந்த, Udaindha - நடுங்கிக் கிடந்த
உதவ, Udhava - உபகாரம் செய்ய
இராமன் ஆய் வந்து, Iraman Aayi Vandu - இராமபிரானாய் வந்து தோன்றி
மிடத்தை, Midathai - ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த
ஏழ் மரங்களும், Ezha Marangalum - ஸப்தஸால வ்ருக்ஷங்களையும்
அடங்க, Adanga - ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும்
எய்து, Eythu - பாணத்தாலே துளைபடுத்தி
வேங்கடம் அடைந்த, Vengadam Adaindha - திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான
மால, Maal - எம்பெருமானுடைய
பாதமே, Paadame - திருவடிகளையே
நாளும், Naalum - நாள்தோறும்
அடைந்து, Adaindhu - ஆச்ரயித்து
உய்ம்மின், Uymin - உஜ்ஜிவியுங்கள்