திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 833 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
833ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 82
எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின் பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே
பதவுரை Show / Hide
எத்திறத்தும் ஒத்து நின்று, Eththiraththum Othu Nindru - எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும்
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய், Uyarnthu Uyarntha Pettriyoy - (குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே!
மூத்திறத்து மூரி நீர், Mooththiraththu Moori Neer - திருப்பாற்கடலிலே
அரா அணை துயின்ற, Ara Anai Thuyinra - சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற
நின், Nin - தேவரீர் விஷயத்திலே
பத்து உறுத்த சிந்தையோடு நின்று, Paththu Uruththa Sindhaiyodu Nindru - பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து
பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம், Paasam Vittavarkku Eththiraththum Inbam - விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும்
இங்கும், Ingum - இவ்வுலகத்திலும்
அங்கம், Angam - அவ்வுலகத்திலும்
ஆகும், Aagum - எளிதாம்.
பாட்டு, Paatu - பின்பிறக்கவைத்தனன் கொல்.