திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 834 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
834ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 83
மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும் எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே
பதவுரை Show / Hide
மட்டு உணவு, Mattu Unavu - தேன் நித்யாயிருக்கபெற்ற
தண், Than - குளிர்ந்த
துழாய், Thuzhai - திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட
அலங்கலாய், Alankalai - திருமாலையை அணிந்துள்ளவனே!
புலன் கழல் விட்டு, Pulan Kazhal Vittu - (உன்னுடைய) விலக்ஷணமான திருவடிகளை (இந்நிலத்திலேயே அநுபவிப்பதை) விட்டு
விண்ணில் ஏறி, Vinnil Eri - பரமபதத்திற் சென்று
வீழ்வு இலாத போகம் கண்ணிலும், Veelvul Ilaadha Pogam Kannilum - அழிவில்லாதொரு போகத்தை அடையப்பெற்றாலும். (அது கிடக்கட்டும்)
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால், Ettinodu Irandu Enum Kayittrinai - பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே
மனம் தனை, Manam Thanai - மநஸ்ஸை
கட்டி, Katti - கட்டுப்படுத்தி
வீடு இலாது, Veedu Iladhu - விச்சேதமில்லாபடி
வைத்த, Vaitha - அமைக்கப்பட்ட
காதல், Kaadhal - ப்ரேமத்தினாலுண்டாகக் கூடிய
இன்பம் ஆகுமே, Inbam Aagume - ஆநந்தத்தை ஒக்குமோ அப்பரமபதாநுபவம்!