திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 836 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
836ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 85
நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
பதவுரை Show / Hide
நஞ்சு அரா அணை, Nanju Ara Anai - (ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே
கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருள்கிற
நாத, Naadha - ஸ்வேச்வரனே!
பாத போதினில், Paadha Podhinil - (உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த, Vaitha - (இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை, Sindhai - மகஸ்ஸை
வாங்குவித்து, Vaanguviththu - அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க, Neenguvikka - வேறு விஷயங்களில் போக்க
நீ, Ni - ஸ்வதந்த்ரனான நீ
இனம், Inam - இன்னமும்
மெய்த்தன், Meiththan - மெய்யாகவே
வல்லை ஆதல், Vallai Aathal - ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை
அறிந்தனன், Arindhanan - அறிந்திருக்கிறேன்
மாயனே!, Mayane - ஆச்சரியசக்தியுக்தனே!
என்னை, Ennai - அடியேனை
நின் மாயமே உய்ந்து, Nin Maayame Uyndhu - உன்னுடைய மாயச்செயலையே கடத்தி
மயக்கினில், Mayakkinil - ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து)
மயக்கல், Mayakkal - மயக்கவேண்டா