திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 837 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
837ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 86
சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கை வாய் ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால் வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே
பதவுரை Show / Hide
சாடு நாடு பாதனே, Saadu Naadu Paadhane - சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே!
சலம் கலந்த பொய்கை வாய், Salam Kalanda Poigai Vaai - (விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே
ஆடு அரவின், Aadu Aravin - (செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய
வன்பிடர், Vanpidar - வலியதான பிடரியிலே
நடம் பயின்ற, Nadam Payindra - நர்த்தனம் செய்த
நாதனே!, Nadhane - ஸ்வாமியே
கோடு நீடு கைய, Koodu Needu Kaiya - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால்  நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே!
கண்ணனே, Kannane - கண்ணபிரானே!
செய்ய பாதம், Seyya Paatham - (உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை
நாளும், Naalum - நாள்தோறும்
உன்னினால், Unninhaal - அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது
மெய், Mei - மெய்யாகவே
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல், Veedan Aaga Seyadha Vannam En Kol - (அடியேனை) முத்தனாக்காதது ஏனோ!