திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 839 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
839ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 88
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அரவு அளாய் அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய் உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே
பதவுரை Show / Hide
வெள்ளை வேலை, Vellai Velai - வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே
வெற்பு, Verpu - மந்தரமலையை
நாட்டி, Naatti - நட்டு
வேள் எயிறு அரர், Vel Eiyiru Arar - வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை
அளாய், Alai - (கடைகயிறாகச்) சுற்றி
அள்ளல் ஆ, Allal Aa - அலைகள் செறியும்படி
கடைந்தஅன்று, Kadaindhanru - (கடலைக்) கடைந்தருளின காலத்தில்
அருவரைக்கு, Aruvarikku - தாங்க முடியாததான அம்மலைக்கு
ஓர் ஆமை நெய், Oru Amai Ney - (தாரகமான) ஒரு ஆமையாகி
வானவர்களுக்கு, Vaanavargalukkum - தேவதைகளுக்கு
உள்ள நோய்கள் தீர் மருந்து, Ulla Noykal Theer Marundhu - ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை
அளித்த, Alitha - (கடலிற் கடைந்தெடுத்து) அருளின
எம் வள்ளலாரை, Em Vallaralarai - உதாரனான எம்பெருமானை
அன்றி, Andri - யன்றி
மற்று ஓர் தெய்வம், Mattru Or Deivam - வேறொரு தேவதையை
நான் மதிப்பவனே, Naan Mathippavane - நான் (ஒருபொருளாக) மதிப்பனோ!