திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 840 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
840ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 89
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர் மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே
பதவுரை Show / Hide
முன், Mun - முற்காலத்தில்
பார் மிகுந்த பரம், Paar Mikuntha Param - பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை
ஒழிச்சுவான், Ozhichchuvaan - ஒழிப்பதற்காக
அருச்சுனன்  தேர் மிகுத்து, Aruchchunan Ther Mikuththu - அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி
மாயம், Maayam - (பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை
ஆக்கி நின்று, Aakki Nindru - உண்டாக்கி
கொன்று, Konru - (எதிரிகளைக்) கொன்று
வெள்ளிசேர் மாரதர்க்கு, Velliseer Maaratharkku - ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு
வான் கொடுத்து, Vaan Koduthu - வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து
வையம், Vaiyam - பூமண்டலத்தை
ஐவர் பாலது ஆம், Aivar Paalathu Aam - பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த
சீர் மிகுந்த, Seer Mikuntha - புகழ் மிகுந்த
நின் அலால், Nin Alaal - உன்னைத்தவிர
ஓர் தெய்வம், Or Deivam - மற்றொரு தெய்வத்தை
நான் மதிப்பனே, Naan Mathippane - நான் ஆதரிப்பேனோ!