திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 840 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 89 | பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே | பதவுரை Show / Hideமுன், Mun - முற்காலத்தில் பார் மிகுந்த பரம், Paar Mikuntha Param - பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை ஒழிச்சுவான், Ozhichchuvaan - ஒழிப்பதற்காக அருச்சுனன் தேர் மிகுத்து, Aruchchunan Ther Mikuththu - அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி மாயம், Maayam - (பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை ஆக்கி நின்று, Aakki Nindru - உண்டாக்கி கொன்று, Konru - (எதிரிகளைக்) கொன்று வெள்ளிசேர் மாரதர்க்கு, Velliseer Maaratharkku - ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு வான் கொடுத்து, Vaan Koduthu - வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து வையம், Vaiyam - பூமண்டலத்தை ஐவர் பாலது ஆம், Aivar Paalathu Aam - பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த சீர் மிகுந்த, Seer Mikuntha - புகழ் மிகுந்த நின் அலால், Nin Alaal - உன்னைத்தவிர ஓர் தெய்வம், Or Deivam - மற்றொரு தெய்வத்தை நான் மதிப்பனே, Naan Mathippane - நான் ஆதரிப்பேனோ! |