திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 841 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
841ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 90
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே
பதவுரை Show / Hide
புனித, Punitha - பரிசுத்தமான
எம் ஈசனே, Em Eesane - எம்பெருமானே!
குலங்கள் ஆய ஈர் இரண்டில், Kulangal Aaya Eer Irandil - (ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள்
பிறந்திலேன், Pirandhileen - நான் பிறக்கவில்லை
கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும், Kalangal Aaya Nalkalaigal Kaalilum - (சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும்
நவின்றிலேன், Navinrilen - பயிற்சி செய்யவில்லை;
புலன்கள் ஐந்தும், Pulangkal Aindhum - பஞ்சேந்திரியங்களையும்
வென்றிலேன், Vendrilen - ஜயிக்கவில்லை.
பொறியிலேன், Poriyilen - பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு)
நின், Nin - உன்னுடைய
இலங்கு பாதம் அன்றி, Ilangu Paatham Andri - ஒளிமிக்க திருவடிகளைத் தவிர
மற்று ஓர் பற்று இலேன், Mattru Oru Patru Ilen - வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன்