திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 843 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 92 | விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே | பதவுரை Show / Hideவேலை நீர், Velai Neer - ஜலதத்துவமாகிய கடலை படைத்து, Padaiththu - (முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும் அடைத்து, Adaiththu - (ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்; அதில் கிடந்து, Adhil Kidandhu - (தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும் முன், Mun - முன்னொருகாலத்திலே கநைடபுது, Kanaitaputhu - (தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்) ஏழ்விடை குலங்கள், Ezhuvidai Kulangal - நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும் அடர்ந்து, Adarnthu - கொழுப்படக்கி வென்றிவேல் மண்மாதரர், Vendiveel Manmatharar - ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய கடி கலந்த, Kadi Kalanda - பரிமளம் மிக்க திருத்தோளோடே புணர்ந்த, Punarndha - ஸம்ச்லேஷித்த காலி ஆய, Kaali Aaya - கோபாலகிருஷ்ணனே! நின் தனக்கு, Nin Thanakku - உன் பக்கலிலே அடைக்கலம் புகுந்த என்னை, Adaikalam Pugundha Ennai - சரணம் புகுந்த என்னை நோக்கி அஞ்சல் என்ன வேண்டும், Anjal Enna Vendum - “பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும். |