திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 843 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
843ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 92
விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார் கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே
பதவுரை Show / Hide
வேலை நீர், Velai Neer - ஜலதத்துவமாகிய கடலை
படைத்து, Padaiththu - (முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து, Adaiththu - (ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து, Adhil Kidandhu - (தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன், Mun - முன்னொருகாலத்திலே
கநைடபுது, Kanaitaputhu - (தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்)
ஏழ்விடை குலங்கள், Ezhuvidai Kulangal - நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும்
அடர்ந்து, Adarnthu - கொழுப்படக்கி
வென்றிவேல் மண்மாதரர், Vendiveel Manmatharar - ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
கடி கலந்த, Kadi Kalanda - பரிமளம் மிக்க திருத்தோளோடே
புணர்ந்த, Punarndha - ஸம்ச்லேஷித்த
காலி ஆய, Kaali Aaya - கோபாலகிருஷ்ணனே!
நின் தனக்கு, Nin Thanakku - உன் பக்கலிலே
அடைக்கலம் புகுந்த என்னை, Adaikalam Pugundha Ennai - சரணம் புகுந்த என்னை நோக்கி
அஞ்சல் என்ன வேண்டும், Anjal Enna Vendum - “பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும்.