திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 845 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 94 | ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே | பதவுரை Show / Hideஇராமனே, Iramane - இராமபிரானே! ஊனில் மேய ஆவி நீ, Oonil Meya Aavi Nee - சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு உற்றமோடு உணர்ச்சி நீ, Utramoadu Unarchi Nee - ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு. ஆனில் மேய ஐந்தும் நீ, Aanil Meya Aindhum Nee - பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ; அவற்றுள் நின்ற தூய்மை நீ, Avatrul Nindra Thuymai Nee - அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது; வானினோடு மண்ணும் நீ, Vaaninodu Mannum Nee - நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும் வளம் கடல் பயனும் நீ, Valam Kadal Payanum Nee - அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ; யானும் நீ, Yaanum Nee - அடியேனு“ உன் அதீகன்; அது அன்றி, Adhu Andri - இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல் எம்பிரானும் நீ, Embiranum Nee - ஸர்வேச்வரனும் நீ காண். |