திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 848 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 97 | வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே | பதவுரை Show / Hideவெய்ய ஆழி, Veyya Aazhi - (எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும் சங்கு தண்டு வில்லும் வாளும், Sangu Thandu Villum Vaalum - திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும் சேரும் மார்ப, Searum Maarba - நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே! நாதனே, Nadhane - ஸர்வஸ்வாமியே! ஐயில் ஆய ஆக்கை நோய், Aiyil Aaya Aakkai Noi - சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை ஏந்து சீர் கைய!, Aendhu Seer Kai - தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே செய்யபோதில் மாது, Seyyapothil Maathu - செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி அறுத்து வந்து, Aruththu Vandu - தொலைத்து வந்து நின் அடைந்து, Nin Adaindhu - உன்னை அடைந்து உய்வது ஓர் உபாயம், Uyvadhu Oor Ubaayam - நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை எனக்கு, Enakku - அடியேனுக்கு நீ நல்கவேண்டும், Nee Nalkavendum - அருள வேணும். |