திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 849 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
849ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 98
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும் துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன் பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே
பதவுரை Show / Hide
மாய!, Maaya - ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே!
மறம் துறந்து, Maram Thurandhu - கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி, Vanjam Maatri - கன்னங்சுவடுகளைத் தவிர்த்து
ஐம்புலன்கள் ஆசையும் துறந்து, Aimpulankal Aasaiyum Thurandhu - பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து
நின் கண், Nin Kan - உன் பக்கலில்
ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன், Aasaiye Thodarnthu Nindra Kaayinen - பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன்
பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு
பேர் இடர் கழிக்கண் நின்றும், Per Idar Kazhikkal Nindrum - மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும்
நீக்கும் ஆ, Neekum Aa - நீங்கும் பிரகாரத்தையும்
மற்று, Mattru - அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும்
எனக்கு, Enakku - அடியேனுக்கு
மறந்திடாது, Marandhidaadhu - மறவாமல்
கல்க வேண்டும், Kalka Vendum - அருளவேணும்