திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 850 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 99 | காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே | பதவுரை Show / Hideபூவை வண்ணனே, Poovai Vannane - காயாம்பூப்போன்ற நிறமுடையவனே! பின்னைகேள்வ!, Pinnaikelva - ! நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே நான் செய் வல்வினை காட்டி, Naan Sey Valvinai Kaatti - நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி பயன் தனில், Payan Thanil - அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில் மனம் தனை, Manam Thanai - எனது மநஸ்ஸை நாட்டி வைத்து, Naatti Vaiththu - துணியும்படி செய்வித்த நல்ல அல்ல, Nalla Alla - அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை செய்ய எண்ணினார், Seyya Enninara - செய்ய நினைத்திருக்கிறார்கள் என கேட்டது அன்றி, En Kaettathu Andri - என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக உன்னது ஆவி, Unnathu Aavi - என்னுடைய ஆத்மாவை நின்னொடும் பூட்டிவைத்த என்னை, Ninnodum Poottevaitha Ennai - உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை |