திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 851 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 100 | பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே | பதவுரை Show / Hideபெறற்கு அரிய மாயனே, Perarku Ariya Mayane - (ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே! பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும், Pirappinodu Per Idar Kazhikan Nindrum - பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும் நீங்கும் அஃது, Neengum Ahthu - நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள் இறப்ப வைத்த, Irappa Vaitha - மறந்தொழிந்த ஞான நீசரை, Gnaana Neesarai - ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை கரை கொடு, Karai Kodu - ஏற்றம் ஆ பெறற்கு அரிய, Perarku Ariya - துர்லபமான சின்ன பாதம் பத்தி ஆன, Chinna Paatham Pathi Aana - உன் திருவடிகளில் பக்தியாகிற பாசனம், Paasanam - மரக்கல (ஓட) த்தை எனக்கு நல்க வேண்டும், Enakku Nalka Vendum - அடியேனுக்கு அருளவேணும். |