திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 852 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
852ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 101
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப் பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
பதவுரை Show / Hide
ஏமம் நீர் நிறத்து, Aemam Neer Nirathu - மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மா !, Amma - ஸ்வாமி!
இரந்து உரைப்பது உண்டு, Irandu Uraippathu Undu - (தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு
வாழி, Vaazhi - பல்லாண்டு பல்லாண்டு;
மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில், Mannu Seervaram Tharum Thirukkurippil - (சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில்
வைத்தது ஆகில், Vaithathu Aagil - அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.)
பரந்த, Paranda - கண்ட விடங்களில் அலைந்து திரிகிற
சிந்தை, Sindhai - எனது நெஞ்சானது
ஒன்றி நின்று, Onri Ninru - (தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு
நின்ன, Ninna - தேவரீருடைய
பாதபங்கயம், Paadapangayam - திருவடித்தாமரைகளை
நிரந்தரம், Nirantharam - இடைவிடாமல்
நினைப்பது ஆக, Ninaippathu Aaga - தியானித்திருக்கும்படியாக
நீ நினைக்க வேண்டும், Nee Ninaikka Vendum - தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும்.