திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 853 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 102 | விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே | பதவுரை Show / Hideதெழிக்கும் நீர், Thezhikkum Neer - கொந்தளிக்கின்ற கடலிலே பள்ளி, Palli - சயனங்கொண்டிருக்கிற மாய, Maaya - ஸர்வேச்வரனே! பன்றி ஆய, Pandri Aaya - மஹாவராஹமாகக் திருவவதரித்த வென்றி வீர, Ventrivira - ஜயசீலனான வீரனே! துள்ளும் நீர், Thullum Neer - துள்ளின கடலிலே குன்றினால், Kundrinaal - மலைகளைக் கொண்டு உள்ளு வேனது, Ulluvendathu - (அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய ஊனம் நோய், Oonam Noi - சரீர சம்பந்தமான நோய்களை வரம்பு செய்த, Varambu Seitha - அணைகட்டின தோன்றல், Thonral - ஸ்வாமியே! யிலவு இலாத காதலால், Yilavu Iladha Kaadhalal - நீக்கமில்லாத அன்பினால் விளங்கு பாத போதில் வைத்து, Vilangu Paath Podhil Vaiththu - (உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து ஒழிக்கும் ஆ, Ozhikkum Aa - ஒழிக்கும் வழிகளில் ஒன்று, Ondru - ஒருவழியை சொல்லிவிடு, Sollividu - அருளிச் செய்க |