திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 854 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
854ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 103
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே
பதவுரை Show / Hide
திரு கலந்து சேரும், Thiru Kalandu Serum - பெரிய பிராட்டியார்  நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற
மார்பு, Marbu - திருமார்பையுடையனே!
தேவர் தேவர் தேவனே, Thevar Thevar Devane - ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே!
இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற, Irukku Kalandha Vedham Neethi Aagi Nindra - (பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான
நின் மலா, Nin Mala - பரிசுத்தனே
கரு கலந்த, Karhu Kalandha - பொன்னோடு  சேர்ந்த
காளமேகம் மேனி, Kaalamegam Menni - காளமேகம்போன்ற திருமேனியையுடைய
ஆய, Aaya - கண்ணபிரானே!
நின் பெயர், Nin Peyar - உன் திருநாமஙக்ளை
ஒழிவு இலாது, Ozhivu Iladhu - நிரந்தரமாக
உரு கலந்து  உரைக்கும் ஆறு, Uru Kalandha Uraikkum Aaru - திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை
உரைசெய், Uraichai - அருளிச் செய்யவேணும்.