திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 856 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 105 | மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே | பதவுரை Show / Hideமண்ணை உண்டு, Mannai Undu - பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும் பின் உமிழ்ந்து, Pin Umizhndhu - பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும் இரந்துகொண்டு, Irandhukondu - (மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று அளந்து, Alandhu - அளந்துகொண்டும். மண் கண்ணுள் அல்லது இல்லை என்று, Mann Kannul Allathu Illai Endru - ‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி வென்று, Vendru - (அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த காலம் ஆயினும், Kaalam Aayinum - ஸர்வகால நிர்வாஹகனே! பண்ணை வென்ற இன்சொல் மங்கை, Pannai Vendra Insoll Mangai - பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய கொங்கை, Kongai - திருமுலைத்தடத்திலே தங்கு, Thangu - பிரியாது வாழ்கிற பங்கயக்கண்ண, Pangayakkann - புண்டரீகாக்ஷனே! நின்ன வண்ணம் அல்லது, Ninna Vannam Allathu - உன் வடிவழகுதவிர எண்ணும் வண்ணம் இல்லை, Ennum Vannam Illai - தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை. |