திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 857 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
857ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 106
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன் பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்னொரு காலத்து
கறுத்து எதிர்ந்த காலநேமி, Karuthu Edhirntha Kaalanemi - கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன்
காலனோடு கூட, Kalanodu Kooda - யமலோகம் போய்ச்சேரும்படியாக
அறுந்த, Arundhu - அவன் தலையை அறுத்த
ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய், Aazhisangu Thandu Villum Vaalum Aendhinai - பஞ்சாயுதாழ்வார்களை
ஏந்தினாய், Aendhinai - திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே!
தொறு கலந்த ஊனம் அஃது, Thoru Kalandha Oonam Ahthu - பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை
அன்று ஒழிக்க, Andru Ozhikka - அப்போதே போக்குவதற்காக
முன், Mun - எல்லாருடையவும் கண்முன்னே
குன்றம் பொருத்த நீ, Kundram Poruththa Nee - கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய
புகழ்க்கு அலால், Pugazhkkal Ahaal - திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்)
நெஞ்சம், Nenjam - எனது நெஞ்சுக்கு
ஓர் கேசம் இல்லை, Oru Kesam Illai - சிறிதும் ப்ரதியில்லை.