திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 858 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
858ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 107
காய் சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன் மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால் நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே
பதவுரை Show / Hide
எம் ஈசனே, Em Eesane - எம்பெருமானே!
காய் சினந்த காசிமன்னன், Kaai Sinantha Kaasimanthan - மஹா கோபியான காசிராஜாவும்
வக்கரன், Vakkaran - (ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும்
பவுண்டிரன், Pavundiran - பௌண்ட்ரக வாஸுதேவனும்
மா சினந்த மாலி, Maa Sinantha Maali - அதிகோபிஷ்டனான மாலியும்
மா கமாலி, Maa Kamali - மஹானான ஸுலிமாலியும்
கேசி, Kesi - (குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும்
தேனுகன், Thenughan - தேநுகாஸுரனும்
நாசம் உற்று வீழ, Naasam Utru Veezh - துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக
நாள் கவர்ந்த, Naal Kavarndha - (அவர்களுடைய) வாழ்நாளை முடித்த
நின், Nin - தேவரீருடைய
கழற்கு அலால், Kazharppu Ahaal - திருவடிகளுக்குத் தவிர
எத்திறந்தும், Eththirandhum - வேறு எவ்விஷயத்திலும்
நேச பாசம், Nesa Paasam - ஆசாபாசத்தை
வைத்திடேன், Vaiththidein - வைக்கமாட்டேன்