திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 859 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 108 | கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே | பதவுரை Show / Hideகேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன், Kaedu Il Seer Varaththan Aam Ayan - அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன கெடும் வரத்து அரன், Kedum Varathu Aran - எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய) நாடினோடு கூட, Naadinoodu Kooda - நாடுகளோடு கூட கூடும் ஆசை அல்லது, Koodum Aasai Alladhu - எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர நாட்டம் ஆயிரத்தன் நாடு, Naattaam Aayiraththan Naadu - ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும் கண்ணீரும், Kannirum - அடையப்பெறுவதாயிருந்தாலும் வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும், Veedu Aanadhu Pogam Eydhi Veetirundha Podhiyilum - மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும் ஒன்று குறிப்பில் கொள்வனோ, Onru Kurippil Kolvanon - மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ. |