திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 860 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 109 | சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் | பதவுரை Show / Hideசுருங்குவாரை இன்றியே, Surunguvaarai Indriye - சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே சுருங்கினாய், Surunginaai - (ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே! சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே, Surungiyum Perukku Vaarai Indriye - அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல் பெருக்கம் எய்து, Perukkam Eydhu - (த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி பெற்றியோய், Petriyoiy - பெற்ற பெருமானே செருக்குவார்கள், Serukkuvargal - அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய தீ குணங்கள், Thee Gunangal - அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை தீர்த்த, Theertha - தொலைத்தருளின என்று, Endru - இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த, Irukkuvaai Muni Kanangal Aentha - வேதமோதும் வாயையுடையரான மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு) யானும் ஏத்தினேன், Yaanum Aeththinaen - அடியேனும் துதித்தனித்தனை. |