திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 864 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
864ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 113
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப் புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர் நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
பதவுரை Show / Hide
நெஞ்சமே!, Nenjame - என்மனமே
வாழி, Vaazhi - உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள்
சலம் கலந்த செம்சடை, Salam Kalanda Semsadha - கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும்
கறுத்த கண்டன், Karutha Kandan - (விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும்
புலன் கலங்க, Pulan Kalanga - ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு
வெண்தலை, Venthala - வெளுத்துப்போன கபாலத்திலே
உண்ட, Unda - பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த
பாதகத்தான், Paadhakaththaan - கோரமாதகியுள்ள சிவபிரானுடைய
வன்துயர்கெட், Vanthuyarket - வலிதான துக்கம் தீரும்படி
அலங்கல், Alangal - திருத்துழாய் மாலையையணிந்த
மார்வில், Maarvil - திருமார்பினின்றும்
வாசம் நீர், Vaasam Neer - திவ்யபரிமளமான தீர்த்தத்தை
கொடுத்தவன், Koduththavan - அவனுக்கு ப்ரஸாதித்தருளி
அடுத்த சீர், Adutha Seer - என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய
நலம்கொள் மாலை, Nalamkol Maalai - ஆநந்தமயனான எம்பெருமானை
கண்ணும் வண்ணம், Kannum Vannam - அணுகும் வழியாகிற அவனது திருவருளையே
எண்ணு, Ennu - அநுஸந்தித்து