திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 865 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 114 | ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே | பதவுரை Show / Hideஎன் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே ஈனம் ஆய, Eenam Aaya - (அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல எட்டும், Ettum - அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும் நீக்கி, Neekki - போக்கி ஏதம் இன்றி, Edham Inri - ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய் மீது போய், Meethu Poi - (அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று வானம், Vaanam - பரமபதத்தை ஆளவில்லை நூல், Aalavillai Nool - அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில் ஞானம் ஆகி, Gnanam Aagi - ஆத்மஞானத்தை யளிப்பவனாயும் ஞாயிறு ஆகி, Gnayiru Aagi - ஸூரியனைப்போலே இந்திய ஞானத்தை அளிப்பவனாயும் ஏனம் மூர்த்திஆய், Enam Moorthiyaai - மஹா வராஹமூர்த்தியாய் ஞாலம் முற்றும், Gnaalam Muttum - பூமி முழுவதையும் ஓர் எயிறு, Oru Eiyiru - ஒரு கோட்டினாலே இடந்த, Idandha - அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த எந்தை, Endhai - எம்பெருமானது பாதம், Paatham - திருவடிகளை எண்ணி, Enni - சிந்தித்து வணங்கி, Vanangi - நமஸ்கரித்து வாழ்த்து, Vazhthu - துதிக்கக்கடவை |