| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 87 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 2 | செக்க ரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண் பல் முளையிலக அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன் தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ–1-7-2 | செக்கரிடை,Sekkaridai - செவ் வானத்திலே நுனி கொம்பில்,Nuni kombil - கொம்பின் நுனியிலே தோன்றும்,Thondrum - காணப்படுகிற சிறுபிறை முளை போல,Sirupirai mulai pola - சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல, நக்க,Nakka - சிரித்த செம் அவர் வாய்,Sem avar vai - மிகவுஞ் சிவந்த வாயாகிய தி்ண்ணை மீது,Thinnai meedhu - மேட்டிடத்தில் நளிர் வெண் பல் முளை,Nalir ven pal mulai - குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள் இலக,Ilaka - விளங்க அஃகுவடம்,Akkuvadam - சங்கு மணி வடத்தை உடுத்து,Uduthu - (திரு வரையில்) தரித்த ஆமைத் தாலி,Amai thali - ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை பூண்ட,Poonda - கழுத்திலணி்ந்து கொண்டவனும் அனந்த சயனன்,Anantha sayanan - திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும் தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன் தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |