திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 870 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 119 | பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே | பதவுரை Show / Hideஅரங்கம், Arangam - திருவரங்கத்திலே பொன்னிசூழ், Ponnichool - காவிரிசூழ்ந்த மேய, Meya - நித்யவாஸம் செய்தருள்கிற பூவை வண்ண, Poovai Vanna - காயம்பூப்போன்ற திருமேனியையுடைய மாய!, Maaya - ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே! கேள், Keel - (இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்; என்னது, Ennathu - என்னுடையது ஆவி என்னும், Aavi Ennum - ஆத்மா என்கிற வல்வினையினுள், Valvinaiyinul - வலிய பாபராசியிலே கொழுந்து எழுந்து உள்ள, Kozhundhu Ezhunthu Ulla - (தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து உள்ள தேவரீருடைய பாதழ் என்ன நின்று, Paathazh Enna Nindru - திருவடியென்கிற ஒண்சுடர் கொழுமலர், Onchudar Kozhumalar - அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே மன்னவந்து பூண்டு, Mannavandhu Poondhu - ஸ்திரமாக வந்து படிந்து எங்கும், Engum - தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும் வாட்டம் இன்றி நின்றது., Vattam Inri Nindrathu - குறையாமல் வியாபியா நின்றது |