திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 871 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 120 | இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே | பதவுரை Show / Hideஉயக்கொள், Uyakkol - (நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான மேகவண்ணன், Megavannan - காளமேக நிபச்யாமனான பெருமான் இன்று, Indru - இன்றைக்கு (நிர்ஹேதகமாக) இயக்கு அறாத பல் பிறப்பில், Iyakku Aradha Pal Pirappil - தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும் என்னை, Ennai - அடியேனை மாற்றி, Maatri - மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி வந்து நண்ணி, Vandhu Nanni - இங்கேயெழுந்தருளி நெருங்கி தன்னில் ஆய என்னுள், Thannil Aaya Ennul - தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே தன், Than - தன்னுடைய மன்னுசோதி, Mannuchothi - நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை மயக்கினான், Mayakkinaan - ஸம்ச்லேஷிப்பித்தான்! ஆதலால், Aadhalal - இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே என் ஆவி தான், En Aavi Than - எனது ஆத்ம வஸ்துவானது இயக்கு எல்லாம் அறுத்து, Iyakku Ellam Aruththu - ஒன்றோடொன்று இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து அறாத இன்பம் வீடு:, Aradha Inbam Veedu - ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை பெற்றது, Pettrathu - பெற்றாதயிற்று |