| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 872 | திருமாலை || (திரு நாம சங்கீர்தனத்தாலே யமன் முதலானோர் தலையிலே காலை வைத்துக் கூத்தாடும்படியான பெருமை பெற்றேன்) 1 | காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே | moo ulagu,மூ உலகு - எல்லா உலகங்களையும் undu,உண்டு - (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து umizhndha,உமிழ்ந்த - (பிரளயம் நீங்கின பிறகு ) அவற்றை வெளிப்படுத்திய mudhalva,முதல்வ - ஜகத் காரண பூதனே! arangamaa nagarulane,அரங்கமாநகரளானே! - இங்கு வந்து சாய்ந்து அருளிற்று -திருநாமம் சொல்ல வல்லான் ஒருவனை கிடைக்கவற்றோ என்னும் ஆசையாலே அன்றோ nin naamam katra,நின் நாமம் கற்ற - உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான aavalippudaimai,ஆவலிப்புடைமை - செருக்கினாலே pulanai,புலனை - பஞ்சேந்திரியங்களையும் kaavalil vaithu,காவலில் வைத்து - (வெளியில் ஓடாதபடி) சிறையில் அடைத்து kali thannai,கலி தன்னை - பாப ராசியை kadakka payndhu,கடக்க பாய்ந்து - வெகுதூரம் உதறித் தள்ளி naavalittu,நாவலிட்டு - ஜய கோஷம் செய்து namandhamar thalaigal meedhe,நமன்தமர் தலைகள் மீதே - யம படர்களின் தலை மேல் uzhi tharugindrom,உழி தருகின்றோம் - அடி யிட்டுத் திரிகின்றோம். kandai,கண்டாய் - (முன்னிலை அசைச்சொல்) |