Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 872 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
872திருமாலை || (திரு நாம சங்கீர்தனத்தாலே யமன் முதலானோர் தலையிலே காலை வைத்துக் கூத்தாடும்படியான பெருமை பெற்றேன்) 1
காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே
moo ulagu,மூ உலகு - எல்லா உலகங்களையும்
undu,உண்டு - (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து
umizhndha,உமிழ்ந்த - (பிரளயம் நீங்கின பிறகு ) அவற்றை வெளிப்படுத்திய
mudhalva,முதல்வ - ஜகத் காரண பூதனே!
arangamaa nagarulane,அரங்கமாநகரளானே! - இங்கு வந்து சாய்ந்து அருளிற்று -திருநாமம் சொல்ல வல்லான் ஒருவனை
கிடைக்கவற்றோ என்னும் ஆசையாலே அன்றோ

nin naamam katra,நின் நாமம் கற்ற - உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான
aavalippudaimai,ஆவலிப்புடைமை - செருக்கினாலே
pulanai,புலனை - பஞ்சேந்திரியங்களையும்
kaavalil vaithu,காவலில் வைத்து - (வெளியில் ஓடாதபடி) சிறையில் அடைத்து
kali thannai,கலி தன்னை - பாப ராசியை
kadakka payndhu,கடக்க பாய்ந்து - வெகுதூரம் உதறித் தள்ளி
naavalittu,நாவலிட்டு - ஜய கோஷம் செய்து
namandhamar thalaigal meedhe,நமன்தமர் தலைகள் மீதே - யம படர்களின் தலை மேல்
uzhi tharugindrom,உழி தருகின்றோம் - அடி யிட்டுத் திரிகின்றோம்.
kandai,கண்டாய் - (முன்னிலை அசைச்சொல்)