Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 873 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
873திருமாலை || (திருநாம சங்கீர்த்தநத்தில் உள்ள இனிமையாலே பரமபதமும் வேண்டா என்கிறார் ) 2
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே
pachchai maa malai pol meni,பச்சை மா மலை போல் மேனி - பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்
pavalam vai,பவளம் வாய் - பவளம் போன்ற சிவந்த திருவாயையும்
sem kamalam kan,செம் கமலம் கண் - செந்தாமரை மலர்போன்ற திருக் கண்களையுமுடைய
achutha,அச்சுதா - அச்சுதனே!
amarar Yerey,அமரர் ஏறே - நித்ய ஸுரிகளுக்குத் தலைவனே!
aiyar tham kolunthe,ஆயர் தம் கொழுந்தே - இடையர் குலத்தில் தோன்றிய இளம் குமாரனே
ennum,என்னும் - என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற
ichchuvai,இச்சுவை - இந்த அநுபவ ருசியை
thavira,தவிர - விட்டுவிடும்படி
yaan poi,யான் போய் - யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று
indira lokam aalum,இந்திர லோகம் ஆளும் - (அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற
achchuvai,அச்சுவை - அந்த அநுபவ ருசியை
perinum,பெறினும் - அடைவதாயிருந்தாலும்
venden,வேண்டேன் - (அதனை) விரும்பமாட்டேன்.