| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 874 | திருமாலை || (அத்தோடு விரோதிக்கும் சம்சாரமும் வேண்டாம் என்கிறார்) 3 | வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் ) பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே -3- | manisar thaam,மனிசர் தாம் - மநுஷ்யர்கள் vedham nool,வேதம் நூல் - வேத சாஸ்திரத்திற்படியே nooru pirayam puguvarellum,நூறு பிராயம் புகுவரேலும் - நூறு பிராயம் வாழ்ந்திருப்பர்களே யானாலும் paathiyum,பாதியும் - அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும் urangi pogum,உறங்கி போகும் - உறக்கத்தாலே கழியும்; nindra ippadinaiyaandu,நின்ற இப்பதினையாண்டு - மிகுந்த ஐம்பது வருஷம் paedhai,பேதை - சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும் balagan,பாலகன் - ‘சிறு பயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் adhu aagum,அது ஆகும் - நெஞ்சால் நினைக்கவும் தகாத யௌவநாவஸ்தையாயும் pini,பிணி - வியாதி மயமாயும் pashi,பசி - ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும் mooppu,மூப்பு - கிழத் தனமாயும் thunbam,துன்பம் - மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்; aadhaal,ஆதலால் - இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால் piravi,பிறவி - ஜந்மத்தை venden,வேண்டேன் - விரும்புகிறேனில்லை. |