| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 875 | திருமாலை || (கொடிய பாவிகளுக்கும் திரு நாமம் சொல்ல அதிகாரம் உண்டாய் இருக்க இழப்பதே என்று வயிறு எரிகிறார்) 4 | மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே | moitha,மொய்த்த - அடர்ந்து கிடக்கிற val vinaiyul nindru,வல் வினையுள் நின்று - கொடிய பாப ராசியினுள்ளே நின்று moonru ezuthu udaiya peraal,மூன்று எழுத்து உடைய பேரால் - கோவிந்த நாமத்தாலே kathira bandhum andrae,கத்திர பந்தும் அன்றே - க்ஷத்ர பந்துவமன்றோ paraangadhi,பராங்கதி - சிறந்த பதவியை kandu kondaan,கண்டு கொண்டான் - கண்டு அநுபவிக்கப் பெற்றான்; ithanai adiyar aanarkku,இத்தனை அடியர் ஆனார்க்கு - இவ்வளவு ஆநுகூல்யம் உடையவர்கட்கும் irangum,இரங்கும் - அருள் புரிகின்ற nam arangan aaya pitthanai,நம் அரங்கன் ஆய பித்தனை - நம் அழகிய மணவாளனாகிற ஆஸ்ரித வியாமுக்தனை petrum,பெற்றும் - சேஷியாகப் பெற்று வைத்தும் piraviyul,பிறவியுள் - ஸம்ஸாரத்திலகப்பட்டு pinangum aare,பிணங்கும் ஆறே - வருந்துகிற விதம் என்னே! antho,அந்தோ - ஆத்ம வஸ்து இப்படிப் படுவதே என்று வெறுக்கிறார் |