| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 876 | திருமாலை || (அல்ப்பமாயும் அநித்யமுமாய் உள்ள ப்ராக்ருத விஷயங்களைப் பற்றுவார் சீலமில்லா சிறியார் என்கிறார்) 5 | பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித் தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே | pendiraal,பெண்டிரால் - மனைவியரால் sugangal,சுகங்கள் - ஸகல ஸூகங்களையும் uyppaan,உய்ப்பான் - அநுபவிப்பதாகக் கருதி periyadhu or idumbai,பெரியது ஓர் இடும்பை - மிகப் பெரிதான துயரங்களை poondu,பூண்டு - மேற் கொண்டு iraa,இரா - இராப் பொழுதிலே undu,உண்டு - புஜித்து kidakkum podhum,கிடக்கும் போதும் - படுக்கையிலே சாயும் போதும் udalukke karaittu,உடலுக்கே கரைத்து - சரீரத்திற்காகவே கவலைப் பட்டு nainthu,நைந்து - நெஞ்சு உளையப் பெற்று, than thuzhaam maalai maarban thamargal aay,தண் துழாம் மாலை மார்பன் தமர்கள் ஆய் - குளிர்ந்த திருத் துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமனது அடியாராய் paadi,பாடி - (அவன் குணங்களை வாயாரப்) பாடி aadi,ஆடி - (பரவசமாய்க்)கூத்தாடி thontu poontu,தொண்டு பூண்டு - (இவ்வகைகளாலே)சேஷ வ்ருத்தியை மேற் கொண்டு amutham unnaa thozhumbar,அமுதம் உண்ணா தொழும்பர் - (பகவத் குணானுபவமாகிற) அமுதத்தை புஜிக்கப் பெற்றாத நீர் soru ukkum aare,சோறு உகக்கும் ஆறே - சோற்றை விரும்பும் வகை என்னோ! |