| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 877 | திருமாலை || (போக்தாவின் நிலை இல்லாமையை சொல்கிறார்) 6 | மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர் அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே | maram suvar,மறம் சுவர் - கொடுமையாகிற சுவரை madhil eduthu,மதிள் எடுத்து - மதிளாக எழுப்பியும் marumaikku,மறுமைக்கு - ஆமுஷ்மிக பலத்திற்கு verumai poondu,வெறுமை பூண்டு - ஏழ்மையை மேற் கொண்டும் இருக்கிற நீங்கள் puram suvar,புறம் சுவர் - வெளிச் சுவராய் oattai,ஓட்டை - அநித்யமான maadam,மாடம் - சரீரமானது puralum podhu,புரளும் போது - தரையில் விழும் காலத்தை ariya maatteer,அறிய மாட்டீர் - அறிய மாட்டீர் aram suvar aagi nindra,அறம் சுவர் ஆகி நின்ற - தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற aranganarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளனுக்கு aal seyaadhe,ஆள் செய்யாதே - அடிமை செய்யாமல் puram suvar,புறம் சுவர் - வெளிச் சுவரான உடம்பை kolam seydhu,கோலம் செய்து - அலங்கரித்து pul kavva,புள் கவ்வ - பறவைகள் கவ்விக் கொள்ளும் படி kidakkindreere,கிடக்கின்றீரே - கிடக்கின்றீர்களே. |