| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 878 | திருமாலை || (முமுஷுக்களாக ப்ரமித்து இருக்கிற பாஹ்ய மதஸ்தரைக் குறித்து ஆஸ்ரியத் தக்க தைவத்தை உபதேசிக்கிறார்) 7 | புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான் தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் | kalai,கலை - சாஸ்திரங்களை ara katra maandhar,அற கற்ற மாந்தர் - நன்றாக ஓதின மனிதர் pulai aram aagi nindra,புலை அறம் ஆகி நின்ற - நீச தர்மமாயிராநின்ற puthodu samanam,புத்தொடு சமணம் - பௌத்த மதம் க்ஷபண மதம் முதலிய ellaam,எல்லாம் - எல்லா மதங்களையம் kaanparo,காண்பரோ - நெஞ்சாலே தான் ஆராய்வார்களோ? ketparo,கேட்பரோ - காது கொடுத்துத் தான் கேட்பார்களோ? (அது நிற்க) thalai arupundum,தலை அறுப்புண்டும் - என் தலையானது அறுக்கப் பட்டாலும் saageen,சாகேன் - நான் சாக மாட்டேன்; sathiyam,சத்தியம் - இது சத்தியம் ; aiya,ஐயா - ஸ்வாமிகளே! kaanmin,காண்மின் - (ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்; silaiyinaal,சிலையினால் - வில்லாலே ilangai setra,இலங்கை செற்ற - இலங்கையை நாசஞ்செய்த devane,தேவனே - எம்பெருமானே devan aavan,தேவன் ஆவான் - ஸர்வேஸ்வரனெனப்படுவான் |