Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 878 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
878திருமாலை || (முமுஷுக்களாக ப்ரமித்து இருக்கிற பாஹ்ய மதஸ்தரைக் குறித்து ஆஸ்ரியத் தக்க தைவத்தை உபதேசிக்கிறார்) 7
புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
kalai,கலை - சாஸ்திரங்களை
ara katra maandhar,அற கற்ற மாந்தர் - நன்றாக ஓதின மனிதர்
pulai aram aagi nindra,புலை அறம் ஆகி நின்ற - நீச தர்மமாயிராநின்ற
puthodu samanam,புத்தொடு சமணம் - பௌத்த மதம் க்ஷபண மதம் முதலிய
ellaam,எல்லாம் - எல்லா மதங்களையம்
kaanparo,காண்பரோ - நெஞ்சாலே தான் ஆராய்வார்களோ?
ketparo,கேட்பரோ - காது கொடுத்துத் தான் கேட்பார்களோ?
(அது நிற்க)

thalai arupundum,தலை அறுப்புண்டும் - என் தலையானது அறுக்கப் பட்டாலும்
saageen,சாகேன் - நான் சாக மாட்டேன்;
sathiyam,சத்தியம் - இது சத்தியம் ;
aiya,ஐயா - ஸ்வாமிகளே!
kaanmin,காண்மின் - (ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்;
silaiyinaal,சிலையினால் - வில்லாலே
ilangai setra,இலங்கை செற்ற - இலங்கையை நாசஞ்செய்த
devane,தேவனே - எம்பெருமானே
devan aavan,தேவன் ஆவான் - ஸர்வேஸ்வரனெனப்படுவான்