| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 879 | திருமாலை || (எம்பெருமானுடைய வைபவத்தை பொறாதவர்கள் கொல்லத் தக்கவர் என்கிறார்) 8 | வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே | arangamaanakarulaane!;,அரங்கமாநகருளானே!-; - கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது அவதாரத்தில் பிற்பாடர் ஆனவருடைய விரோதிகளை போக்குகைக்காக அன்றோ என்கிறார் verupodu,வெறுப்பொடு - (பகவத் விஷயத்தைகு கேட்கவும் பொறாத) வெறுப்போடு கூடிய samanar,சமணர் - க்ஷபணர்களும் mundar,முண்டர் - சைவர்களும் vidhiil,விதிஇல் - பாக்கிய ஹீனரான saakiyar kal,சாக்கியர்கள் - பௌத்தர்களும் nin pal,நின் பால் - உன் விஷயத்திலே poruppu ariyanakal,பொறுப்பு அரியனகள் - பொறுக்க முடியாத சில வார்த்தைகளை pesil,பேசில் - சொல்லுவார்களாகில் adhuve noy aagi,அதுவே நோய் ஆகி - அந்த நிந்தைகளைக் கேட்டதே வியாதியாய் poovathu,போவது - முடிந்து போவது (உத்தமம் அங்ஙனன்றியே) enakku,எனக்கு - (பகவத் விரோதிகளின் ஸத்தையையும் பொறாத) எனக்கு kuruippu adaiyum aagil,குறிப்பு அடையும் ஆகில் - இலக்கு வாய்க்குமாகில் koodumael,கூடுமேல் - (அதற்கு மேல்) (எனக்கு சக்தியும்) கூடுமாகில் aangae,ஆங்கே - உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே thalaiyai aruppadhae,தலையை அறுப்பதே - அவன் தலையை அறுத்துத் தள்ளுகையே karumam kandaiya,கருமம் கண்டாய் - செய்யத் தக்கது காண் |