| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 880 | திருமாலை || (இசைந்தவர்களை -நோக்கி நீங்கள் சர்வ ஸூலபனான கண்ணபிரானைப் பணிமின் என்கிறார்) 9 | மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள் உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே | madhi ila,மதி இலா - தத்துவ ஞானமில்லாத maanidangal,மானிடங்காள் - மனிதர்களே matrum,மற்றும் - (நான் சொல்லுகிறவனைத்) தவிரவும் oor dheivam,ஓர் தெய்வம் - (சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம் undae,உண்டே - உண்டோ? (இல்லை) neengal,நீங்கள் - நீங்கள் uttra podhu andri,உற்ற போது அன்றி - (சரணமடைந்த அந்த க்ஷுத்ர தேவர்கட்கு) ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல் (மற்றைக் காலத்தில்) oruvan endru,ஒருவன் என்று - (நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை unar mateer,உணர மாட்டீர் - அறிய மாட்டீர்கள் (நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே) mel,மேல் - (பதப் பொருளுக்கு) மேற்பட்ட atram,அற்றம் - மறை பொருளை (தாத்பரியத்தை) onru ariyeer,ஒன்று அறியீர் - சிறிதும் அறிய மாட்டீர்கள்; avan allaal,அவன் அல்லால் - (இனி முடிவுப் பொருளை நீங்கள் உணருமாறு கூறுவேன்;) அந்த எம்பெருமான் தவிர theivam illai,தெய்வம் இல்லை - (சரணமடையக் கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை; (ஆகையால்) kanru inam meytha endhai,கன்று இனம் மேய்த்த எந்தை - கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு), மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய kazhal inai,கழல் இணை - இரண்டு திருவடிகளையும் neer panimin,நீர் பணிமின் - நீங்கள் சரணமாகப் பற்றுங்கள். |