Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 880 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
880திருமாலை || (இசைந்தவர்களை -நோக்கி நீங்கள் சர்வ ஸூலபனான கண்ணபிரானைப் பணிமின் என்கிறார்) 9
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே
madhi ila,மதி இலா - தத்துவ ஞானமில்லாத
maanidangal,மானிடங்காள் - மனிதர்களே
matrum,மற்றும் - (நான் சொல்லுகிறவனைத்) தவிரவும்
oor dheivam,ஓர் தெய்வம் - (சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம்
undae,உண்டே - உண்டோ? (இல்லை)
neengal,நீங்கள் - நீங்கள்
uttra podhu andri,உற்ற போது அன்றி - (சரணமடைந்த அந்த க்ஷுத்ர தேவர்கட்கு)
ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல் (மற்றைக் காலத்தில்)

oruvan endru,ஒருவன் என்று - (நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை
unar mateer,உணர மாட்டீர் - அறிய மாட்டீர்கள் (நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே)
mel,மேல் - (பதப் பொருளுக்கு) மேற்பட்ட
atram,அற்றம் - மறை பொருளை (தாத்பரியத்தை)
onru ariyeer,ஒன்று அறியீர் - சிறிதும் அறிய மாட்டீர்கள்;
avan allaal,அவன் அல்லால் - (இனி முடிவுப் பொருளை நீங்கள் உணருமாறு கூறுவேன்;) அந்த எம்பெருமான் தவிர
theivam illai,தெய்வம் இல்லை - (சரணமடையக் கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை; (ஆகையால்)
kanru inam meytha endhai,கன்று இனம் மேய்த்த எந்தை - கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு),
மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய

kazhal inai,கழல் இணை - இரண்டு திருவடிகளையும்
neer panimin,நீர் பணிமின் - நீங்கள் சரணமாகப் பற்றுங்கள்.