| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 881 | திருமாலை || (விபவ அவதாரங்களுக்கு பிற்பட்டவருக்கும் உதவும்படி திருவரங்கம் பெரிய கோயிலிலே வந்து கிடக்கிறான் என்கிறார்) 10 | நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச் சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே | engum,எங்கும் - எல்லா விடங்களிலும் Deivam,தெய்வம் - (அம்மன் பிடாரி முதலான தாமஸ) தேவதைகளை naattinaan,நாட்டினான் - (ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் ஆஸ்ரயிக்கலாம்படி எம்பெருமான்) நிலை நிறுத்தி uybhavargku,உய்பவர்க்கு - உஜ்ஜீவிக்க விரும்புமவர்கட்கு uyum vannam,உய்யும் வண்ணம் - உஜ்ஜீவிக்கலாம்படி nallathu or arul thannaale,நல்லது ஓர் அருள் தன்னாலே - தனது ஒப்பற்றதொரு க்ருபையினால் thiruarangam,திருஅரங்கம் - அரங்க மா நகரை kaattinaan,காட்டினான் - காண்பித்தருளினான் nambimeerkaal,நம்பிமீர்காள் - ‘நமக்கு ஒன்றாலும் குறையில்லை’ என்று நினைந்திருப்பவர்களே! ketrae,கேட்டிரே - (நான் சொல்வதைக்) கேட்டீர்களா? garuda vaaganan nirgavum,கெருட வாகனன் நிற்கவும் - கருடனை வாஹநமாக வுடைய பெருமான் விளங்கா நிற்கச் செய்தேயும் saettai than madiyagathu,சேட்டை தன் மடியகத்து - (தேவதாந்தரங்களைப் பற்றுகிற நீங்கள்) மூதேவியிடத்தினின்றும் selvam paarthu irukkireer aishwaryam pera ninaithirukkiral polum,செல்வம் பார்த்து இருக்கின்றீர் - ஐஸ்வர்யம் பெற நினைத்திருக்கிறீர்கள் போலும் |