Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 881 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
881திருமாலை || (விபவ அவதாரங்களுக்கு பிற்பட்டவருக்கும் உதவும்படி திருவரங்கம் பெரிய கோயிலிலே வந்து கிடக்கிறான் என்கிறார்) 10
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே
engum,எங்கும் - எல்லா விடங்களிலும்
Deivam,தெய்வம் - (அம்மன் பிடாரி முதலான தாமஸ) தேவதைகளை
naattinaan,நாட்டினான் - (ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் ஆஸ்ரயிக்கலாம்படி எம்பெருமான்) நிலை நிறுத்தி
uybhavargku,உய்பவர்க்கு - உஜ்ஜீவிக்க விரும்புமவர்கட்கு
uyum vannam,உய்யும் வண்ணம் - உஜ்ஜீவிக்கலாம்படி
nallathu or arul thannaale,நல்லது ஓர் அருள் தன்னாலே - தனது ஒப்பற்றதொரு க்ருபையினால்
thiruarangam,திருஅரங்கம் - அரங்க மா நகரை
kaattinaan,காட்டினான் - காண்பித்தருளினான்
nambimeerkaal,நம்பிமீர்காள் - ‘நமக்கு ஒன்றாலும் குறையில்லை’ என்று நினைந்திருப்பவர்களே!
ketrae,கேட்டிரே - (நான் சொல்வதைக்) கேட்டீர்களா?
garuda vaaganan nirgavum,கெருட வாகனன் நிற்கவும் - கருடனை வாஹநமாக வுடைய பெருமான் விளங்கா நிற்கச் செய்தேயும்
saettai than madiyagathu,சேட்டை தன் மடியகத்து - (தேவதாந்தரங்களைப் பற்றுகிற நீங்கள்) மூதேவியிடத்தினின்றும்
selvam paarthu irukkireer aishwaryam pera ninaithirukkiral polum,செல்வம் பார்த்து இருக்கின்றீர் - ஐஸ்வர்யம் பெற நினைத்திருக்கிறீர்கள் போலும்